அதிகாலை நேரத்தில் பல் தேய்த்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்.! அதிகாலை எழுபவர்களே உஷார்.!!
in karnadaga girl died brush with rate killer police investigation going on
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மால்பே பகுதியை சார்ந்தவர் லீலா கார்கிரா (வயது 57). இவர் தினமும் விடியற்காலையில் எழுந்து பல் துலக்குவது வழக்கமான ஒன்றாகும்.
இந்த நிலையில்., கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று காலை 5 மைக்கு வழக்கம் போல பல்துலக்க சென்ற நிலையில்., பற்பசைக்கு பதிலாக எலி மருந்தால் பல் துலக்கியுள்ளார்.
பல்லை துலக்கும் போது உள்ள மாற்றத்தை அறிந்து விளக்குகளை எரியவிட்டு பார்க்கையில் விபரீதம் புரிந்ததை அடுத்து., அதிர்ச்சியடைந்த அவர் தனது வீட்டில் உள்ள நபர்களுக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான உறவினர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்., நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga girl died brush with rate killer police investigation going on