19 வயதாகும் பயங்கரவாதி கைது... ஜம்முவில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தானது இரத்து செய்யப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கு பின்னர் பல போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் போன்றவை நடைபெற்றது. 

மேலும், தீவிரவாத அச்சுறுத்தல் போன்றவை அதிகளவு இருந்ததால் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, தற்போது இயல்பு நிலையானது மீள துவங்கியுள்ளது. 

இந்த சமயத்தில், லஷ்கர் அமைப்பினை சார்ந்த பயங்கரவாதி கைது செய்ய்ய்யப்பட்டுள்ளான். மேலும், இவனது வயது 19 என்பது தெரியவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

அங்குள்ள பாராமுல்லா மாவட்டத்தில் இருக்கும் அந்தேர்கம் பட்டான் பகுதியில் சாஜித் பரூக் என்ற 19 வயது பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இயல்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில், தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொலை செய்யப்பட்டுள்ளார்.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Jammu 19 year old young terrorist arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->