வெள்ளரிக்காய் தருவதாக கூறி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவன்.!
in bihar girl sexual harassment court order jail and penalty
70 வயதுடைய கொடூர முதியவர் எட்டாம் வகுப்பு பயின்று வந்த சிறுமியை கிணற்றுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு உதவியாக இருந்த 40 வயதாகும் நபர் மற்றும் 60 வயதான முதியவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டத்தில் இருக்கும் தியோலி மஞ்சி கிராமத்தை சார்ந்தவர் பாபுலால் மாலிக் (வயது 70). இவனது கூட்டாளியின் பெயர் மோஹித் மாலிக் (வயது 40). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக எட்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை பின்தொடர்ந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுமிக்கு தெரியாமல் செய்து வந்த நிலையில்., சம்பவத்தன்று சிறுமியை இடைமறித்து வெள்ளரிக்காய் கொடுப்பதாக கூறி அங்குள்ள கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்களின் பேச்சில் உள்ள விபரீதத்தை அறியாத சிறுமி கிணற்றுக்கு சென்ற நிலையில்., இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும்., இது தொடர்பாக யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் என்று சிறுமியை மிரட்டிய நிலையில்., வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் இது தொடர்பாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாபுலால் மாலிக் மற்றும் மோஹித் மாலிக் ஆகியோரை கைது செய்தனர். இந்த குற்றம் தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கும் ரூ.35 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in bihar girl sexual harassment court order jail and penalty