ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளான வாகனம்.. 6 பேர் துடிதுடித்து பலி.!!
in Assam truck accident peoples died
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள உடல்குரி மாவட்டத்தின் நாஸான்ஸாலி பகுதியில் திருமணத்திற்கு சென்று வந்த நபர்களின் வாகனம் சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த வாகனம் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து சேதமாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய அனைவரும் வலியால் அலறித்துடிக்கவே, சக வாகன ஓட்டிகள் இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இவர்களில் 14 பேர் பலத்த காயமடைந்து இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கவுகாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Assam truck accident peoples died