அப்பா என் கூட வாப்பா.. நடுரோட்டில் பாசப்போராட்டம் நடத்திய தாய், மகள்.. கண்ணீரில் மிதக்கவிட்ட கள்ளக்காதல்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரப்பிரதேச மாவட்டத்தில் உள்ள திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு 8 வயது மகளுடன் சரஸ்வதி என்ற பெண்மணி சென்றுள்ளார். இவர் தனது கணவர் வெங்கடாசலபதி வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும், அந்தப் பெண்ணிடமிருந்து கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் புகார் கூறியுள்ளார். 

மேலும், விசாரணையில் தனது காதல் மனைவியுடன் வெங்கடாசலபதி வருகை தந்த நிலையில், நான் காதலியுடன் செல்ல விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் அவர் யாருக்கு சொந்தம் என்று இரண்டு பெண்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

அங்குள்ள காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்து, மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி நிலையில், எப்படியாவது தனது கணவன் தன்னுடன் வந்து விட மாட்டானா? என்று ஏங்கிய மனைவியும், தந்தையை ஏங்கி பரிதவித்த மகளும் கையை பிடித்து இழுத்து, கண்ணீருடன் பாசப்போராட்டம் நடத்தியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து புறப்பட்ட கணவனின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி போராடிய நிலையில், காதலியுடன் செல்வதற்கு அந்த கணவன் குறியாக இருந்துள்ளார். மனைவியின் உறவினர்களும் அமைதி காத்த நிலையில், தாயும் மகளும் பாசப் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் நெகிழ்ச்சியை 
அளித்தது. 

ஆனால், பாசப்போராட்டம் நடத்தியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இறுதியில் செய்வதறியாது சாலையில் கதறி அழுது தர்ணா செய்த பெண்மணியை, அவரது மகள் அலைபேசியில் உள்ள தந்தையின் நம்பரை நீக்கக்கோரி ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband sent with illegal affair girl, wife and his daughter cry at road in Tirupati


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->