கள்ளகாதல் விவகாரத்தால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்..!
Husband Kills His Wife Due to illegal affair
கள்ளகாதலால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா சேர்ந்தவர் மாதரவள்ளி. இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஷேக் முன்னி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஷேக் முன்னி சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவருடன் பணியாற்றிய மகபூப் உசேன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டட்ஹு.
நாளடைவில் இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இது மாதரவள்ளிக்கு தெரியவரவே அவர்களை கண்டித்துள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மாதரவள்ளி தனது நண்பர்கள் உதவியுடன் ஷேக் முன்னியை கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் பிணத்தை அங்குள்ள வயலில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அவரின் சடலத்தை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் வயிற்றில் ஆண் குழந்தை சிசு இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஷேக் முன்னியை அவரது கணவர் மற்றும் 2 போலீசார் உட்பட 11 பேர் கடத்திச்சென்று கொலை செய்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband Kills His Wife Due to illegal affair