மனைவியின் தலையோடு சாலையில் ஊர்வலமாக சென்ற கணவன்.! அதன் பிறகு அவர் செய்த செயலை கண்டு அதிர்ச்சியில் காவல்துறையினர்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலம், பரபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் அகிலேஷ் ராவத், இவரது மனைவி ரஜனி. இவரது குழந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இருந்துள்ளது. அதன்பிறகு கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் அகிலேஷ் தனது மனைவியை கடுமையாக தாக்கி அவரை வீட்டில் இருந்து வெளியே தள்ளியுள்ளார். பின்னர் ரஜனியை அவர் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கி உள்ளார். 

படுகாயமடைந்த ரஜனி சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத அகிலேஷ் பட்டப்பகலில் மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து வந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

உடனே விரைந்து வந்த காவல் துறையினர் அகிலேஷ் வழிமறித்து கைது செய்தனர். மேலும் மனைவியின் தலையை பறிமுதல் செய்தபோது திடீரென தேசியகீதம் பாடியுள்ளார். அதன்பிறகு பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed wife in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->