கர்நாடகா || சேர்ந்து வாழ மறுத்த மனைவி கொலை மிரட்டல் விடுத்த கணவன்..! - Seithipunal
Seithipunal


சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்தவர் சிவானந்தா. இவருக்கு ப்ரீத்தி என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சிவானந்தாவுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்குள் தவறான பழக்கம் இருப்பதாக கருதிய ப்ரீத்தி கணவனுடன் தகராறில் ஈடுப்பட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சிவானந்தாவிடம் கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவதன்று மனைவியின் வீட்டிற்கு சென்ற அவர் தன்னுடன் வரும் படி அழைத்துள்ளார். ஆனால், அதற்கு ப்ரீத்தி மறுக்கவே துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். மேலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரி அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband Intimidation his Wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->