கணவன் - மனைவி சண்டை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.!
Husband and wife fight 3 peoples gun shoot death in Hariyana
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி சுமன். இதில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
எந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி சுமன் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் தனது சகோதரர்களான மன்ஜித் மற்றும் முகேஷை சமாதானம் பேச அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து சகோதரர்கள் இருவரும் இன்று தங்கை சுமன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ராகேஷுக்கும் அவரது மனைவி சுமனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இதனை தடுக்க சகோதரர்கள் இருவரும் முயற்சி செய்துள்ளனர்.
இதில் மோதல் ஏற்படவே ராகேஷ் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய ராகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Husband and wife fight 3 peoples gun shoot death in Hariyana