கள்ளக்காதலனுடன் வாழ ஆசை.. விவகாரத்தை நினைக்காமல், கதம் கதமென யோசித்து ஜெயிலில் சிறைப்புறவாக ஜோடி.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியை சார்ந்தவர் தினேஷ். இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்த நிலையில், அதே பகுதியை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்துகொண்டுள்ளார். தம்பதிகளின் வாழ்க்கை இன்பத்துடன் சென்றுள்ளது. 

இந்நிலையில், திடீரென தம்பதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதன்போது, தினேஷின் மனைவிக்கு அப்பகுதியை சார்ந்த நிதின் என்பவருடன் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தினேஷிற்கு தெரியவந்துள்ளது. இதனால் பிரிந்து வாழ்ந்துகொண்டு இருந்த தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

கணவனிடம் தினமும் சண்டையிட விரும்பாத மனைவி, கள்ளக்காதலன் நிதினுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கூலிப்படை மூலமாக ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்து கொலை அரங்கேறியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தினேஷின் மனைவி, நிதின், கூலிப்படை கும்பல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Wife Murder Husband Dinesh due to Affair with Nithin Police Arrest Gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->