குஜராத் : ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் கிருஷ்ணா சாகர் ஏரி உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் முன்னுரை சேர்ந்த 5 சிறுவர்கள் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். இதில் மூன்று சிறுவர்கள் கரையில் இருந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் மட்டுமே ஏரியில் இறங்கி குளித்துள்ளனர்.

 அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்து பதறிப்போன கரையில் இருந்த மூன்று சிறுவர்களும் நண்பர்களை காப்பாற்றுவதற்காக ஏரியில் குறித்தனர். இதில் துரதிஷ்டவசமாக அவர்களும் ஏரியில் மூழ்கினர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை தொடர்ந்து நீச்சல் வீரர்களின் உதவியுடன் ஏரியில் மூழ்கிய சிறுவர்களை தேடும் பணி சுமார் 45 நிமிடம் தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறுவர்கள் 5 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர் .

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற 5 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat 5 children drowned in the lake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->