மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | ஜிஎஸ்டி வரியை 12% குறைப்பு!
GST on pencil sharpeners has come down
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை 16 ஆயிரத்து 982 கோடி ரூபாயை விடுவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது, "இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம்.
அதே தொகை எதிர்கால இழப்பீட்டு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும். 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை மத்திய அரசு செலுத்தும்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் சில முக்கிய அறிவிப்புகள் : தேசிய தேர்வு முகமைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு திருப்பாயம் தொடர்பான அறிக்கை சிறிய மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ராப் என்பது ஒரு வகையான திரவ வெல்லமாகும், இது உத்தரபிரதேசம் மற்றும் பிற வெல்லம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மிகவும் பொதுவானது.
ராப் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 18% இல் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்கிறோம். தளர்வாக இருந்தால் இல்லை. முன்கூட்டியே பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்டால், அது 5% ஆக இருக்கும்.
பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், டேக் டிராக்கிங் சாதனங்கள் அல்லது டேட்டா லாகர்கள் மீது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது, அவை நீடித்த கொள்கலன்களில் 18% முதல் பூஜ்யம் வரை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக 1201 கோடி ரூபாய் இதன் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
GST on pencil sharpeners has come down