ராங் ரூட்டில் பயணம்.. தடுத்து நிறுத்திய போலீஸ்.. நண்பருடன் சேர்ந்து காவலரை சரமாரியாக தாக்கிய பெண்கள்.!!
girls attack police
டெல்லி டெல்லியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததால், தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர் மற்றும் காவலரை இரு பெண்கள் அவர்களது நண்பருடன் சேர்ந்து தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் பெண்கள் உட்பட 3 பேர் தவறான பாதையில் பயணம் சென்று உள்ளனர். இதனால் காவலரும், போக்குவரத்து காவலரும் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அவர்கள் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு தன நண்பர்களை வரவழைத்து இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்திய காவலரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.