ஆந்திராவில் கொடூரம் : தாயின் காதலை எதிர்த்த மகள் - தூக்கில் தொங்கவிட்ட சம்பவம்.!
girl died in home for against mother love in andira
ஆந்திராவில் கொடூரம் : தாயின் காதலை எதிர்த்த மகள் - தூக்கில் தொங்கவிட்ட சம்பவம்.!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள மச்சிலிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா. இவருடைய மகள் ஜூலி. கணவரை இழந்த பத்மா அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
இதை அறிந்த சிறுமி தாயை கண்டித்துள்ளார். இருப்பினும், அவர் அந்த உறவை கைவிடவில்லை. இது சம்பந்தமாகத் தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமி இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்தில போலீசார் சோதனை செய்ததில், சிறுமி உயிரிழந்த இடத்திற்கு அருகே சில சிகரெட் துண்டுகள் கிடந்துள்ளது.
இதை பார்த்த போலீசார் சிறுமியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர். இதையடுத்து போலீசார் தாய் பத்மாவையும், அவரது காதலனையும் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
girl died in home for against mother love in andira