வெறி நாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி.. கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Girl Death after Dog batting
வெறி நாய் கடித்த சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மயிலபுறம் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (12). இவர் கடந்த வாராம் பால் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது தெருவில் சுற்றி கொண்டிருந்த வெறி பிடித்த தெருநாய்கள் கடித்துள்ளது. அபிராமியின் கை, கால் , கண் பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துமனையில், வெறிநாய் கடிக்கான மூன்று தடுப்பூசிகள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிகிழமை உடல்நிலை மோசமானது. அவரவென்டிலேட்டர் உதவியுடன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானர்.
மருத்துவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில், நடத்தப்பட்ட பிரத பரிசோதனையில் மூளையில் பரவிய வைரஸ்களால் சிறுமி அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Girl Death after Dog batting