அதிகாலையிலேயே அதிர்ச்சி - சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அர்ஜுன் நகர் பகுதியில் சிலர் வழக்கம்போல் சுற்றுச்சுவர் அருகில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

இதில், நான்கு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 வயது சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for wall collapse in ariyana


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->