பற்றிக்கொண்ட தீயினால் பறந்து ஓடிய ரசிகர்கள்!! படம் பார்க்கும் பொழுது ஏற்பட்ட விபரீதம்!!
fire in theatre
கன்னியாகுமரியில் உள்ள கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் உள்ள ரிச்சுதமீன்ஸ் என்ற தியேட்டரில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் ரிச்சுதமின்ஸ் திரையரங்கில், “எமன்டன் பிரேமகதா” என்ற பெயர் கொண்ட மலையாள சினிமா ஒளிபரப்பப்பட்டுள்ளது.
படம் ஆரம்பித்து ஒருமணி நேரத்தில் கண்ட்ரோல் ரூமில் இருந்து புகை கிளம்பியுள்ளது. படத்தை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் புகையை கண்டதும் தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
அதற்குள் தியேட்டர் ஊழியர்களுக்கு தகவல் தெரிந்து தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால், அது முடியாமல் போகவே தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்திறங்கினர்.
பின்னர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் தியேட்டருக்கு உரிமையான லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து போயுள்ளது. மின்கசிவு காரணமாக இது நடந்துள்ளதாக தெரிகிறது.