புதுடெல்லி || ரயில்வே குடோனில் அதிகாலையில் பயங்கர தீவிபத்து...!
Fire Accident at raiway Godown
ரயில்வே குடோனில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி பிரதாப் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் சப்ஜி மண்டியில் ரயில்வே குடோன் உள்ளது. இதில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்
இந்த சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்புத் துறை இயக்குனர் தெரிவிக்கையில், பிரதாப் நகர் மற்றும் நிலையத்தில் உள்ள ரயில்வே குடோனில் காலை நான்கு முப்பது மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
English Summary
Fire Accident at raiway Godown