மனைவியுடன் தகராறு - ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் தகராறு - ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரச் செயல்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் வழக்கம் போல் இருவருக்கிடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அவரது மனைவி தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த வாலிபர் மறுநாள் மனைவி இருக்கும் இடத்திற்குச் சென்று அங்கு அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர முயன்றார். 

ஆனால், மனைவி அவருடன் வருவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாலிபர் தான் வைத்திருந்த விஷத்தை உணவில் கலந்து தனது ஆறு வயது மகளுக்கு ஊட்டினார். அதை சாப்பிட்ட சிறுமி அடுத்த நிமிடமே வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த உணவை தன் இளைய மகளுக்கு ஊட்ட முயன்றுள்ளார். 

சிறுமி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் இளைய மகளுக்கு உணவு ஊட்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த விஷம் கலந்த உணவை வாலிபரும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் தந்தை மற்றும் மூத்த மகள் இருவரும் மயங்கினர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father sucide attempt after kill daughter in maharastra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->