மகன் செய்ய வேண்டியதை தானே செய்த தந்தை.! நாட்டாமை படம் கண்முன் வந்து போகுதே..!
father married his son's fiance
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ரோஷன் லால் (வயது 65). இவர் தனது மகன் பப்புவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து சப்னா என்ற பெண்ணை வரனாக பார்த்துள்ளார்.
இந்த நிலையில், பப்புவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில், பப்பு மற்றொரு பெண்மணியை காதலித்து வந்துள்ளார். தனது தந்தைக்கு பயந்து பப்பு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே, இவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர்.
இந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சியாக பப்பு தன் காதலியுடன் ஓட்டம் பிடிக்கவே, சப்னாவும் குடும்பத்தினரும் செய்வதறியாது திணறியுள்ளார். பின்னர் ராம்லால் பெண்ணை தான் மணந்துகொள்வதாக தெரிவிக்கவே, குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து சப்னாவை திருமணம் செய்து கொண்ட ராம்லால், அவருக்கு உதவியாக இருக்கும் என்று செய்ததாக கூறியுள்ளார். மேலும், இதனை அறிந்த பலரும் இளம்பெண்ணின் வாழ்க்கையை வீணடித்துவிட்டார்கள் என்று கூறி வருகின்றனர்.
English Summary
father married his son's fiance