சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய இயக்குனர் கைது.!
Farud director arrested in hariyana
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த சன்னி குமார் வர்மா (வயது 33). இவர் தன்னை பிரபல பாலிவுட் படங்களின் காஸ்டிங் இயக்குனர் என கூறிக்கொண்டு சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக பலரிடம் ஏமாற்றி வந்துள்ளார்.
அதன்படி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் சமூக வலைதளங்களின் மூலம் அவர்களது புகைப்படங்கள் மற்றும் மற்ற விபரங்களை கேட்டு வாங்கி கொண்டு உள்ளார். அதன் பின்னர் அவர்களின் சிலரை தேர்வு செய்து ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிவித்துள்ளார்.
இதில் சில பெண்களிடம் சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக கூறி பணமும் பெற்றுள்ளார். ஆனால் இதுவரை சினிமா வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
இதனால் பாத்திரப்படைந்த பெண்கள் சன்னி குமார் வர்மா மிக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சன்னிகுமார் வர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Farud director arrested in hariyana