இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வந்த மிரட்டல்..! இ - மெயிலால் பரபரப்பு..!
email about potential terror threat to Indian cricket team
விராட் கோலி தலைமை கொண்ட இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபெற்று விளையாடி கொண்டு வருகிறது. ஏற்கனவே டி20 தொடரையும் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வந்துள்ளார்.
இப்படி நடந்துவரும் இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த போவதாகவும் அதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக பாகிஸ்தான், கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்புடன் பேசபட்டு வந்தது.
இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும் சமுக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ள பிசிசிஐ, அது வெறும் புரளி என்று தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
email about potential terror threat to Indian cricket team