அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை.!!
ECI issue waring to political parties and candidates
மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் 6 முதல் 9ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை குறிப்பிட்டு பிரச்சாரத்தின் போது பிரச்சாரம் அடிப்படையில் விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை நேரடிவாகவோ அல்லது மறைமுகமாகவோ மீறியதற்கான நோட்டீஸ் பெற்ற வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் மீண்டும் நடத்தை விதிகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர் போட்டியாளர்களை இழிவுபடுத்த அல்லது அவமதிக்கும் வகையில் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் மோசமான கருத்துக்கள் அல்லது கன்னத்திற்கு குறைவான பதிவுகள் பகிரப்படக்கூடாது என அரசியல் கட்சிகளை இங்கே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
English Summary
ECI issue waring to political parties and candidates