பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.! குடிகார இளைஞனை பரலோகம் அனுப்பிய பாட்டி.!
drinker trying to rape mother
தெலுங்கானா ஹைதராபாத் பகுதியில் இருக்கின்ற ராம்கிருஷ்ணாபுரத்தில் தன்னுடைய 25 வயதான மகன் மற்றும் 65 வயதான தனது தாயுடன் ஒரு பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் மகன் தனியார் ட்ராவெல்ஸ் ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
எனவே, அன்றாடம் அளவுக்கதிகமாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்காமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் மே 16ம் தேதி அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது விதவை தாயை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
இதனால், அந்த தாயும், மூதாட்டியும் சேந்து வாலிபரின் கழுத்தை நைலான் கயிறால் நெரித்து கொன்றுள்ளனர். தொடர்ந்து இறந்த பின்னர் அந்த இளைஞரின் உடலை அந்த வீட்டிற்குள் ஒரு பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.
அதன் பின்னர், அந்த வாலிபரை சில நாட்களாக காணவில்லை என்று அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உண்மைகளை வெளிகொண்டுவனர்.
English Summary
drinker trying to rape mother