கியாஸ் கசிவால் தாய், 2 பிள்ளைகள் என 3 பேர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


சமையல் கியாஸ் சிலிண்டர் தீ விபத்தில் சிக்கி தாய் மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லி நகரில் உள்ள ஆனந்த் பர்பத் பகுதியை சார்ந்த பெண்மணி சுசீலா. இவர் தனது 2 குழந்தைகளான மான்சி (7) மற்றும் மோகன் (7) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவர்களின் வீட்டில் இருந்து சமையல் கியாஸ் கசிந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட தீ விபத்தால், வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் கரும்புகை எழுவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மூவரையும் மீட்டு, அங்குள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூவரும், அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக ஆனந்த் பர்பத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதா சவுகான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

விசாரணைக்கு பின்னரே வீட்டில் நடந்தது தீ விபத்தா? அல்லது பெண்மணி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விபரீதம் ஏதேனும் செய்தாரா? என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Anand Parbat area Gas Leakage Mother and 2 Children Died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->