திடீரென பற்றி எரிந்த 'எய்ம்ஸ் மருத்துவமனை': நோயாளிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக அணைத்துதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இது குறித்து டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

'டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இயக்குனர் அலுவலகத்தில் இன்று காலை 5 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்ததும் 7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை  முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், மேஜைகள், குளிர்சாதன பெட்டி போன்றவை தீயில் கருகி நாசமாகின. 

இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi AIIMS hospital fire accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->