கர்நாடகா: கன்டெய்னர் லாரி மீது கார் மோதல் - போலீஸ் அதிகாரி, மனைவி பலி
Container lorry car accident in Karnataka
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் சிந்துகி இன்ஸ்பெக்டர் ரவி உக்குந்தா (43) மற்றும் அவரது மனைவி மது (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தத கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிந்துகி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கிய இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து நெலோகி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Container lorry car accident in Karnataka