ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 3 பேர் பலி.! முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு.!
CM announced compensation for 3 dead in firecracker unit explosion in Andhra Pradesh
ஆந்திர பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளிகுடம் மண்டலம் கடியாடா கிராமத்தில் உள்ள பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆலை முழுவதும் தீ பற்றி எரிந்து வெடித்து சிதறியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
English Summary
CM announced compensation for 3 dead in firecracker unit explosion in Andhra Pradesh