சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குனர் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குனர் - போலீசார் அதிரடி.!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜாசிக் அலி. மலையாள சினிமாவில் இயக்குநராக உள்ள இவர், `பைனரி' என்ற மலையாள திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த மே மாதம் வெளியானது. 

இந்த நிலையில் ஜாசிக் அலி, கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமியை கதாநாயகி ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதைக்கேட்ட அந்த சிறுமியும் சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜாசிக் அலி சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறி சிறுமியை கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அவர் அந்த சிறுமியை விடுதிகளில் அறை எடுத்து தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தயார் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடக்காவு பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஜாசிக் அலியை கைது செய்தனர். 

அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், அவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinima director arrested for harassment to girl


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->