மத்திய அமைச்சர் பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு.!
Central minister's security vehicle collided with youth killed
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சிகாவத் கடந்த ஜூன் 27-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோதாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவர் இரு சக்கர வாகனத்தில் அணுவகுப்பா சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்புகாக கார் உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்றன
அப்போது அவருடைய பாதுகாப்பு வாகனம் இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெக்தீஷ் சுதர் (வயது 27) என்ற இளைஞர் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த ஜெக்தீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜெக்தீஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து ஜெக்தீஷின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஜெக்தீஷின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
English Summary
Central minister's security vehicle collided with youth killed