பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஆப்பாயில், நன்கு சமைக்காத இறைச்சி உணவுகளை தவிருங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா உட்பட பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

இந்நிலையில், பறவை காய்ச்சலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரவு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், " மக்கள் அரைவேக்காடு முட்டை (ஆப் பாயில் முட்டை), நன்கு வேகவைக்காத கோழி இறைச்சி போன்றவற்றை சாப்பிட கூடாது. 

சமைக்காத இறைச்சியை வீட்டில் திறந்த நிலையில் வைக்க வேண்டாம். வியாபாரிகள் மற்றும் மக்கள், சுகாதாரத்துறையினர் இறந்த பறவையினங்களை வெறும் கைகளால் தொடக்கூடாது. பறவைக்காய்ச்சல் வைரஸ் 70 டிகிரி செல்ஷியஸில் 3 வினாடிகள் இருந்தால் இறந்துவிடும். நன்கு சமைத்த இறைச்சி உணவுகளை மக்கள் சாப்பிட்டால் பிரச்சனை இல்லை " என்று தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Govt Announce Prevention of Bird Flu Infection


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->