உத்தர பிரதேசம்! தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு.!
Boiler explosion accident at factory
உத்திரப்பிரதேசத்தில் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ரானியா அக்பர்பூர் கோட்வாலியில் உள்ள தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென்று கொதிகலன் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த உள்ளார். மேலும் பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Boiler explosion accident at factory