அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது.!! - Seithipunal
Seithipunal


அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது.!!

அசாம் மாநிலத்தில் பாஜக சிறுபான்மை பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் அன்சாருல் ஹக் சவுத்ரி. இவர் தலாய் மோலை கிராமத்தைச் சேர்ந்த தில்வார் ஹுசைன் பர்புய்யா என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக தில்வார் ஹுசைன் பர்புய்யா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சவுத்ரி முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக, அவருடன் இருக்கும் புகைப்படங்களை எங்களிடம் காட்டினார். 

அதன் பின்னர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணமும் கேட்டுள்ளார். அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்சாருல் மேலும் பணம் கேட்டதால், மூன்று தவணைகளில் ரூ.5 லட்சம் கொடுத்ததாக பர்புய்யா புகாரில் கூறினார். 

ஆனால், சொன்ன படி சவுத்ரி அவருக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து போலீசார் பர்புய்யா அளித்த புகாரின் படி அன்சாருல் ஹக் சவுத்ரியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp supporter arrested for money fraud in assam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->