பரபரப்பில் அரசியல்களம் - திடீரென பதவியை ராஜினாமா செய்யும் பீகார் முதல்வர்?  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் முதல்வர் நிதீஷ் குமாருக்கு தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த நிலையில், நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் குமாரின் இந்த திடீர் முடிவு இண்டி கூட்டணியில் உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இண்டி கூட்டணியை முதன் முதலில் உருவாக்கியவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கைகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar cm nitish kumar resign


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->