பீகார் : இடி, மின்னல் தாக்கியதில் ஒரேநாளில் 10 பேர் பலி.!
Bihar 10 people died in a single day due to thunder and lightning
பீகாரில் இடி மின்னல் தாக்கியதில் ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக இடி, மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நாளில் 10 உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண் மாவட்டத்தில் 6 பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,0மோசமான வானிலையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
English Summary
Bihar 10 people died in a single day due to thunder and lightning