தொப்பையை குறைக்காத போலீசாருக்கு விருப்ப ஓய்வு - மாநில அரசு அதிரடி உத்தரவு.!
Belly police reject in hariyana
உடல் எடை அதிகம் உள்ள காவலர்கள் களப்பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்று ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வராத காவலர்கள் மூன்று மாதங்களில் இருந்து பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அசாம் மாநில அரசு சமீபத்தில் அறிவித்து இருந்த நிலையில், தற்போது ஹரியானா மாநில அரசும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனால் உடல் எடை அதிகமாக உள்ள காவலர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து அரியானா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சில காவலர்கள் உடல் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அவர்கள் கடும் பயிற்சி செய்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைத்தால் தான் மீண்டும் பாதுகாப்பு பணிக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Belly police reject in hariyana