மருத்துவத்திற்காக இந்தியாவிற்கு வந்த வங்கதேசத்தினர்.! திருப்பி அனுப்பிய பாதுகாப்பு படையினர்.! - Seithipunal
Seithipunal


வங்க தேச மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தெரிவித்ததாவது,

"தன்னுடைய அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக, இந்தியாவில் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் என்பதால் இங்கு வந்தோம்" என்று தெரிவித்தார். அதன்பின்னர் போலீசாரின் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்பு, வங்கதேச எல்லை காவல்படையினரிடம் நேற்று காலை 8.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தியா - வங்கதேச எல்லையை கண்காணிக்கும் பணியில், எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதும், அத்துமீறி நுழையும் வங்கதேசத்தினரை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருவதும் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh family come to india for medical treatment


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->