இந்தியாவை அலரவிடும் கொரோனா.. ஒரே நாளில் மளமளவென உயர்ந்த உயிரிழப்பு.!
apr 8 corona update in india
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தற்போது தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 5194 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளனர். 402 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
English Summary
apr 8 corona update in india