திருமணத்திற்கு முன் கர்ப்பம்: தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த வாலிபர்! நடந்தது என்ன?
Andhra girl molested case youth escaped
ஆந்திரா, ஏலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்த்த சிவகுமார் கிராம தன்னார்வலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி முடித்து விட்டு சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்றபோது சிவக்குமார் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமியிடம் ஆதார் அட்டை கேட்டு வீட்டிற்குள் நுழைந்து வலு கட்டாயமாக சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் சிறுமி 2 மாதங்களில் உடல்நல குறைவு ஏற்பட்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்தனர். பஞ்சாயத்தில் சிறுமிக்கு, சிவக்குமார் ரூ.10,000 தருவதாகவும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இதை அடுத்து சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் தடபுடலாக நடைபெற்று வந்தது. 2 பேரின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் குவிந்தனர். இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிவக்குமார் கலந்து கொண்டார்.
இந்நிலையில் அதிகாலை திருமணம் மேடைக்கு வர வேண்டிய சிவகுமார் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு சிவக்குமார் இல்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் திருமண நிகழ்ச்சி நடைபெற இருந்த வீட்டில் சோகம் மூழ்கியது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவக்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Andhra girl molested case youth escaped