ரோஜா Vs அனுஷ்கா? ஆந்திர அரசியலில் திடீர் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஆந்திராவில் புகழ்பெற்றவர் நடிகை அனுஷ்கா. இதனை தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஆந்திரா அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சார்பில் நடிகை அனுஷ்கா வேட்பாளராக போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து ஜனசேனா கட்சித் தலைவர்களுடன் நடிகை அனுஷ்கா பேச வருவதாகவும் அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருவதாகவும் திரையுலகை விட்டு விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறுவதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் ஆந்திரா, நகரி தொகுதியில் மூன்றாவது முறையாக நடிகை ரோஜா களமிறங்கியுள்ளார். அவரை தோற்கடிப்பதற்காக தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை நடிகை ரோஜாவுக்கு எதிராக களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து நடிகை அனுஷ்காவுடன் ஜனசேனா கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அனுஷ்கா அரசியல் வருகை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Anushka contest against Roja


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->