மனைவி தலையை வெட்டிவிட்டு, உடலை சாமியை சந்தோஷப்படுத்த கொடுத்த நபர்.!
a men killed his wife for pooja
மத்திய பிரதேச மாநிலத்தில் பசவடார் என்ற கிராமத்தில் 45 மதிக்கத்தக்க ஒரு நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை தெய்வத்தை மகிழ்விப்பதாக கூறி தனது மனைவியின் தலையை வெட்டி கொலை செய்து தலையை வீட்டில் புதைத்துவிட்டு, உடலின் மற்ற பாகங்களை வெட்டி பூஜை அறையில் புதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, அவரது மகன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டனர். மேலும், அந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், "அவர் மாந்திரீக விஷயங்களில் ஈடுபாடு இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டை கொன்றார். தெய்வத்தை திருப்தி படுத்துவதாக கூறி பூஜை அறையில் உடலை புதைத்தார்." என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a men killed his wife for pooja