மகாராஷ்டிரா மாநிலத்தில் காகித ஆலையின் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் காகித ஆலையின் மர கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள காகித ஆலையின் மர கிடங்கில் நேற்று திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் 25 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயானது அனைத்து இடங்களுக்கும் பரவியநிலையில் இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதால் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பல்லார்பூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A fire broke out in the wood warehouse of a paper mill


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->