ஆசையாக சாப்பிட்ட சமோசா தொண்டையில் சிக்கிய சோகம்.. புத்த துறவிக்கு அரங்கேறிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திரகன்னடா கார்வார் பகுதியில் திபெத்தியன் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் பல புத்தமத துறவிகள் தங்கியிருந்து, பூஜைகள் செய்தும், புத்தமதத்தை பயின்றும் வருகின்றனர். இதனைப்போன்று அங்குள்ள 2 ஆம் முகாமில் மங்கோலிய நாட்டினை சார்ந்த போகர்ஜாவாக்லன் தஸ்ஜோர்ஜா (வயது 18) என்ற இளைஞர் தங்கியிருந்து பயின்று வருகிறார். 

இவர் நேற்று தனது அறையில் வழக்கம்போல சமோசா சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதில் திடீரென மயக்கடையவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக உதுறவிகள், இவரை மீட்டு அங்குள்ள கார்வார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவரது தொண்டையில் சமோசா சிக்கி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு சக புத்த துறவிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், போகர்ஜாவாக்லன் தஸ்ஜோர்ஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Buddhist Monk died ate Samosa stuck in thought


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->