8 பேர் உயிருடன் எரித்துக் கொலை..வன்முறை பகுதிக்கு செல்லும் மம்தா பானர்ஜி.!
8 people burnt alive Mamta Banerjee going to violence area
மேற்கு வங்கத்தில் 8 பேர் உயிருடன் கொலை செய்யப்பட்ட பகுதிக்கு நேரடியாக நாளை சென்று பார்வையிட உள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் அருகே ராம்புரஹக் பகுதியிலுள்ள பகுடி கிராமத்தின் துணைத் தலைவர் திங்கட்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் பல குடிசைகளுக்கு தீ வைத்ததில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.
பரோசல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பது ஷேக். இவர் மீது கடந்த திங்கட்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் இச்சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த இவரது ஆதரவாளர்கள் சிலர், எதிர் தரப்பினரின் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த குடிசைகளுக்கு தீ வைத்தனர். மேலும், இந்த தீவிபத்தில் 8பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
English Summary
8 people burnt alive Mamta Banerjee going to violence area