ஆந்திரா : திருமண கோஷ்டியினர் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி, 22 பேர் காயம்
6 killed 22 injured in Tractor overturned in Andhra
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற டிராக்டர் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் புதலாபட்டில் நடைபெறும் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகபோது லக்ஷ்மய்யா கிராமத்திற்கு அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சித்தூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சுரேந்திர ரெட்டி (52), வசந்தம்மா (50), ரெட்டம்மா (31), தேஜா (25), வினீஷா (3), தேசிகா (2) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
English Summary
6 killed 22 injured in Tractor overturned in Andhra