ஆந்திரா : திருமண கோஷ்டியினர் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி, 22 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற டிராக்டர் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் புதலாபட்டில் நடைபெறும் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகபோது லக்ஷ்மய்யா கிராமத்திற்கு அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சித்தூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சுரேந்திர ரெட்டி (52), வசந்தம்மா (50), ரெட்டம்மா (31), தேஜா (25), வினீஷா (3), தேசிகா (2) என அடையாளம் காணப்பட்டனர். மேலும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 killed 22 injured in Tractor overturned in Andhra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->