ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலி.!
5 school students went to bathe in the river drowned
மத்திய பிரதேசத்தில் ஆற்றில் குளிக்க சென்ற 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்தியபிரதேசம் மாநிலம் கத்னி மாவட்டத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் மாலை அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தேடத் தொடங்கினர்.
இதனையடுத்து சிறுவர்களின் ஆடைகள் ஆற்றங்கரை ஓரம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில அவசரகால மீட்பு படையினரும் ஆற்றில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதில் 5 சிறுவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
English Summary
5 school students went to bathe in the river drowned