தெலுங்கானாவில் கோர விபத்து: லாரி-டிராக்டர் மோதியதில் 5 பேர் பலி, 20 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் லாரி-டிராக்டர் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் முனுகளா பகுதியை சேர்ந்த 38 பேர் நேற்று மாலை டிராக்டரில் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றனர். பின்பு நள்ளிரவு பூஜை முடிந்து மீண்டும் அதிகாலை 3 மணி அளவில் டிராக்டரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. லாரி அதிவேகமாக மோதியதால் டிராக்டரில் சென்றவர்கள் அனைத்து புறமும் சிதறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed 20 injured in lorry tractor collision in Telangana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->