திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்.! கார்-டிராக்டர் மோதி 4 பேர் பலி, 3 பேர் காயம்...!
4 killed 3 injured in car tractor collision in uttar pradesh
உத்தரபிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் கார்-டிராக்டர் மோதிய பயங்கர விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் புடாவுன் மாவட்டத்தில் தஹேமி கிராமத்திற்கு அருகே திருமணத்திற்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென டிராக்டரின் பின்பக்கம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்தவர்கள் 6 வயது அர்னாப், 50 வயதான சூரஜ்ஸ்ரீ மற்றும் 25 வயதான ஷஷி யாதவ், 10 வயதான ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 killed 3 injured in car tractor collision in uttar pradesh