ஜார்கண்ட் :: ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள அனேகடா இந்தியன் ஆயில் டிப்போ அருகே, சாய்பாசா-ராஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் 7-8 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ மீது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த குந்தி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி என்று குந்தி காவல் நிலைய அதிகாரி பிந்து குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in auto twowheeler accident in jharkhand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->