இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.! வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வாலிபர். இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இளம் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இது குறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்பொழுது இளம்பெண் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து நீதிபதி வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years in prison for a youth who raped young girl in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->